தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மறுபக்கம் மக்களை கவரும் வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் செய்தியை உதயநிதி வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரையின் போது, மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் உள்ள சின்ன சின்ன குறைபாடுகள் களையப்படும். தேர்தல் முடிந்ததும் இதுவரை ஆயிரம் ரூபாய் வாங்காத பெண்கள் அனைவருக்குமே வழங்கப்படும் என்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.