பொதுவாகவே அதிகமாக வேலை செய்யும்போது அல்லது தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படும். இதனை சரி செய்ய பலரும் பல வழிகளை முயற்சி செய்து பார்த்திருக்கலாம். இவ்வாறு கண்களில் ஏற்படும் கருவளையம் பிரச்சனையை சரி செய்ய பாதாம் எண்ணெய் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதன்படி கண்களில் வரும் கருவளையத்தை பாதாம் எண்ணெய் எளிதில் போக்கிவிடும். ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் இதனை பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஏ டி ஏ இ மெக்னீசியம் கொழுப்பு மற்றும் அமிலங்கள் முகத்தை பொலிவு படுத்துவது மட்டுமல்லாமல் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தையும் சரி செய்யும். தினந்தோறும் இரவு பாதாம் எண்ணையை கண்களுக்கு கீழ் தடவி விட்டு தூங்கினால் ஒரு சில நாட்களில் கருவளையம் அப்படியே மறைந்து விடும். மேலும் எண்ணெய்யை வெறும் கையால் தடவி மசாஜ் செய்வதால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும்.