பீகார் மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்வில் மாணவர்கள் சிலர் தேர்வு தாளில் எழுதிய விடைகளை கண்டு ஆசிரியர் விழி பிதுங்கி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் மாணவி ஒருவர், சார் நான் ஒரு ஏழை மாணவி, தயவுசெய்து என்னை பாஸ் செய்து விடுங்கள், இல்லையென்றால் எனது தந்தை எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார் என்று எழுதியுள்ளார்.

மேலும் சில மாணவர்கள் சினிமா கதைகளையும், கவிதைகள் மற்றும் கதைகள் என எழுதி வைத்துள்ளனர். தேர்வுத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது இதனை கண்ட ஆசிரியர் இது குறித்து பகிர்ந்துள்ளார்.