நாடு முழுவதும் விவசாயிகளுக்கு டி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் கேஒய்சி அப்டேட் செய்யாத விவசாயிகளுக்கு 17வது தவணைத் தொகை கிடைக்காது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பயனாளிகள் கேஒய்சி மற்றும் NPCI கட்டாயம் செய்திருக்க வேண்டும். கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பட்டா பாஸ் பெற்ற விவசாயிகள் தற்போது பலன் பெற முடியாமல் இருப்பதால் அவர்களுக்கும் விரைவில் பணம் கிடைக்க இருக்கிறது. தகுதி இருந்தும் பணம் கிடைக்காமல் இருந்தால் பிஎம் கிசான் உதவி மையம் 011-24300606 மற்றும் 155261 என்ற உதவி எண்கள் அல்லது 18001155266 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.