நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேத்தலில் நாமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து பேசிய அவர், கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை தட்டிக்கேட்டேன்.

ஆனால் என்னை தண்ணீர் பாட்டிலால் தாக்கினார்கள் என கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பொதுகுழுக்கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்-ஐ இபிஎஸ் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டிலால் தாக்கியது குறிப்பிடத்தக்கது.