மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில்  மக்களவைத் தேர்தலில் பாமக, அதிமுக – பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

இதுகுறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் கொள்கையை பாமக கடைப்பிடித்து வருவதாகவும் தனது கட்சியை அவர் ஏலம் விடுகிறார் என்றும் விடிய விடிய எங்களுடன் கூட்டணி பேசிய ராமதாஸ் விடிந்ததும் ஆட்டுக்குட்டியை வரவழைத்து பேசுகிறார் என்றும் காட்டமாக பேசி உள்ளார்.