சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் குதித்த நினைவுகளை ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பகிர்ந்து கொண்டார். ரயிலில் சேப்பாக்கம் வழியாக செல்லும் போது இந்த மைதானத்திற்குள் நம்மை விடுவார்களா? நானெல்லாம் இங்கு விளையாடுவேனா என்று நினைத்துப் பார்த்து இருக்கிறேன். ஊர் திரும்பும் போது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியை பார்த்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கு விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.