சீனாவை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவரின்  கை விரலில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அந்த எலியை பழிவாங்க நினைத்த அந்த பெண், அந்த எலியை தேடிப்பிடித்து அதன் கழுத்தில் தனது ஆத்திரம் தீர கடித்துள்ளார். இதனால் அந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இது போன்று யாரும் முயற்சி செய்யாதீர்கள் என அந்த பெண்ணின் தோழி தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாணவி நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.