தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து சர்வானந்த் பிரபலமாகினார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தது. இந்நிலையில் சர்வானந்த் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் நடிகர பிரபாஸ் திருமணம் முடிந்த பிறகு எனக்கு திருமணம் நடக்கும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக புதிதாக தகவல் வெளியாகியது. வருகிற 26-ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சர்வானந்த் செய்யப் போகும் பெண் பிரபல அரசியல்வாதியின் பேத்தி எனவும் கூறப்படுகிறது. இதுபோன்ற தகவல்களை சர்வானந்த் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.