அமெரிக்காவை சேர்ந்த ஜான் மற்றும் Fin தம்பதியினர் தங்களுடைய மலக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த தம்பதி மனித கழிவுகளை நேரடியாக வீட்டிலேயே இயற்கை உயிர் வாயுவாக மாற்றி சுற்றுச்சூழலுக்கு தீமை ஏற்படாத விதமாக சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பேசிய ஜான், நாங்கள் எங்களது மலத்தை சமையல் எரிவாயுவாக மாற்றி பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

இதற்காக 12 ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் 500 சதுர அடி கிராமப்புற வீட்டில் சிறந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் மலம் கழித்து விட்டு கழிவறையை சுத்தப்படுத்திய உடனே அவை அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சாதனத்திற்குள் சென்று சுத்தமான ஆற்றலாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். சிறப்பு சாதனத்தில் உள்ள தடுப்பான்கள் மூலம் எந்த ஒரு கெட்ட துர்நாற்றமும் வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கிறது. மேலும் இதன் மூலம் தங்களுக்கு சுத்தமான மற்றும் சத்து மிகுந்த இயற்கை உரமும் கிடைப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Beloved Cabin Homestead இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@belovedcabin)