கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் 18 வயதுடைய இளம் பெண்ணான ஜூலியட் லாமோ என்பவர் வசித்து வந்தார். இவர் முதன் முறையாக லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார். அவர் வேலை மற்றும் கல்வி பழு காரணமாக லாட்டரி சீட்டு வாங்கியதையே மறந்து விட்டார். அதன்பின் முதல் பரிசுக்கான எண்கள் அறிவிக்கப்பட்ட பின்பும் பரிசு தொகையை பெறுவதற்கு யாரும் வரவில்லை. இதனால் லாட்டரி சீட்டு நடத்திய நிறுவனம் விசாரணை நடத்தியுள்ளது.

இந்த விசாரணையில் ஜூலியட் லாமா என்ற இளம் பெண் லாட்டரி சீட்டு வாங்கியது தெரியவந்துள்ளது. அதன் பின் அவரிடம் பரிசுக்கான தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலியட் வென்ற பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 290 கோடி ஆகும். இவ்வளவு பணத்தை ஜூலியட் லாமா என்ன செய்வதென்று தெரியாமல் ஆடம்பர கார்களையும் குட்டி விமானத்தையும் ஆடம்பரம் மாளிகையையும் வாங்கியுள்ளார்.