தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு திரிஷா விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ள நிலையில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் வார வசூலில் 75 சதவீதம் வரை விநியோக நிறுவனம் பங்கு கோருவதால் திரையரங்க தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பொதுவாக தமிழ்நாட்டில் 8 பகுதிகளாக திரையிடல் உரிமை விநியோகம் நடைபெறும். 45 சதவீதம் வரை விநியோக நிறுவனம் பங்கு கோரி வந்த நிலையில் லியோவுக்கு கூடுதல் பங்கு கேட்பதாக அறிய முடிகின்றது. திரையரங்க உரிமையாளர்கள் 60% மட்டுமே பங்கு தர முடியும் என்று கூறுவதால் ஒப்பந்தம் மேற்கொள்வதில் இழுப்பறி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லியோ திரைப்படத்திற்கு இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.