வாத்து ஒன்று புலிக்கு தண்ணீர் காட்டிய விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக காட்டுவிலங்குகளில் பயங்கரமாக வேட்டையாடும் விலங்கில் ஒன்று தான் புலி. அந்தவகையில் புலியானது தண்ணீரில் நீந்தி வந்த வாத்து ஒன்றினை  வேட்டையாட மெதுவாக வருகின்றது. இதனை உடனே சுதாரித்துக் கொண்ட வாத்து புலியின் கண்முன்னே மறைந்து அதற்கு தண்ணீர் காட்டியுள்ளது.

உடனே வேட்டையாட வந்த  வாத்தை காணாமல் புலி ஒரு நிமிடம் குழப்பத்தில் அங்கும் இங்கும் தேடி பார்த்துள்ளது. இந்த வீடியோ  காண்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பை வரவழைத்துள்ளது.