இந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சுஜாதா. இவர் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகி சுஜாதா தனக்கு 18 வயது இருக்கும் போது கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஸ்வேதா மோகன் என்ற மகள் இருக்கிறார். இவரும் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக இருக்கிறார். இந்நிலையில் பாடகி சுஜாதா ஒரு பேட்டியில் தனக்கு இரண்டு முறை கருக்கலைப்பு ஆனதாகவும், அதன் பிறகு தான் ஸ்வேதா பிறந்ததாகவும் உருக்கமாக  கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆனது. அதன் பிறகு தான் ஸ்வேதா பிறந்தார். அந்த சமயத்தில் சினிமாவில் பிஸியாக இருந்ததால் என்னால் ஸ்வேதாவுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. நான் அவளுடைய பள்ளி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டது கிடையாது. ஆனால் தற்போது ஸ்வேதாவின் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.