தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று பிரபல சின்னத்திரை நடிகையான கிருத்திகா தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வருபவர் தான் கிருத்திகா. இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே எங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருந்தது. இதனால் பிரச்சனைகளும் வந்தது. பின்னர் வீட்டில் பேசிய இருவரும் பிரிந்து விட்டோம். என் அண்ணனுக்கு என் மகனை தத்து கொடுத்து விட்டேன். இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் உள்ளது என தெரிவித்துள்ளார்.