தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்த ரசிகர்களை கவர்ந்த கனிகா எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த குடும்பங்களையும் கவர்ந்தார். இவருக்கு இன்று தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், மார்பகப் புற்றுநோயால் தனது தாய்ப்படும் கஷ்டங்களை பார்த்து நொந்து போய் காரில் பாடலை சத்தமாக போட்டுவிட்டு கதறி அழுதேன். பாதுகாப்புக்காக தாயின் மார்பகத்தை வெட்டி எடுத்ததை பார்த்து வேதனை இல் துடித்தேன். இது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.