விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் காதலிக்க பயம் கொள்பவர்கள் ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அதில் பெண் ஒருவர், காதலிப்பதை சில ஆண்கள் வெளியில் சொல்வதற்கு கூட பயம் கொள்வார்கள் என குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்த ஒரு ஆண், காதலிக்கிறோம் என வெளியில் கூறிவிட்டால் அது ஒரு கதையாகவே மாறிவிடும், அவர்கள் எங்களை காதலிப்பதை எங்களால் நம்ப முடியவில்லை என்று பேசுகிறார்.

ஆனால் காதலிப்பதை வெளியில் கூறுவதற்கு தைரியம் இல்லாவிட்டால் ஏன் காதலிக்கிறீர்கள் என பெண் ஒருவர் கேள்வி கேட்க தற்போது இருக்கும் ஆண்கள் பயந்தவர்களாக இருக்கிறார்கள், குடும்பம் மற்றும் சமூகம் என பெண்கள் யோசிக்கும் விஷயத்தில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள் எனவும் பெண்கள் அப்படியே மாறிவிட்டார்கள்.

குடும்பம், பெற்றோர் மற்றும் வேலை என எதையும் யோசிக்காமல் காதலனுக்காகவும் காதலுக்காகவும் நிறைய ஏமாற்றங்களை சந்திக்கிறார்கள் என இந்த வாரம் விவாதம் நடைபெற்று உள்ளது. அது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.