நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார், இனி என்னால் இந்த ஜென்மத்தில் அவருடன் படம் பண்ண மாட்டேன் என்று  இசையமைப்பாளர்  டி.இமான் தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு சமாதானம் பேசி பஞ்சாயத்துப் பண்ணி வைக்க வந்தார்.

ஒரு குடும்பம் சிதறிடக்கூடாதுங்குற நல்லெண்ணத்துல நாங்க ஒற்றுமையா வாழணும்னு நினைச்சு சமாதான முயற்சிகளையும் எடுத்தார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணல. நியாயத்துப் பக்கம் நின்னார். அது இமானுக்குப் பிடிக்கல என தெரிவித்துள்ளார்.