எனக்கு திருமணம் என்று பரவி வரும் வதந்திகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகை அஞ்சலி திட்டவட்டமாக கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “வதந்திகள் மூலம் இதுவரை 4 முறை எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது எனக்கு 5ஆவது திருமணம். நிச்சயமாக எனக்கு திருமணம் நடக்கும். ஆனால், இப்போது இல்லை. EMI-கள் நிறைய இருப்பதால், திருமணம் செய்யும் எண்ணம் தற்போது இல்லை” என்று கூறினார்.