தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவருடைய முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய். இவர் தெலுங்கில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தமிழில் ஜேம்ஸ் பாண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பவர்ஸ்டார் பவன் கல்யாணை கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக பவன் கல்யாண் மற்றும் ரேணுதேசாய் கடந்த 2012 -ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் தற்போது ரேணு தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

இவர் 18 வருடங்களுக்குப் பிறகு தற்போது ரவிதேஜா நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரேணு தனக்கு இதயம் சார்ந்த பிரச்சினை இருப்பதாக தற்போது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். தான் உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாகவும் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்து வருவதோடு சிகிச்சையும் எடுத்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை ரேணுவுக்கு இதயம் சார்ந்த பிரச்சனை இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by renu desai (@renuudesai)