மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் ஓபிஎஸ் அணி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்த தகவலை இன்று மாலை அறிவிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து இன்று மாலை அறிவிப்போம் என கூறியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் பாஜகவின் இறுதி பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.