அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன், நடிகை கஸ்தூரி சந்தித்து பேசியுள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியுடனான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி, ராஜ் சத்தியன் உடன் இருந்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நடிகை கஸ்தூரி இபிஎஸ்-ஐ சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இவரும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள உள்ளாரா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்திரி ரகுராம் அதிமுகாவில் இணைந்திருந்தார்.