சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல நாங்களும் இந்தியாவுக்காக தான் பாடுபடுகிறோம். எங்களுடைய அணியும் இந்தியா அணி தான்.

இந்த வெற்றிக்காக தான் நாங்களும் ஒருங்கிணைந்து team spirit உடன் பாடுபடுகின்றோம். விளையாட்டுப் போட்டி நடத்துவோர் விளையாடுபவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். செஸ் ஒலிம்பியா போட்டியின் போது நாட்டின் பாரம்பரியத்தை கலை நிகழ்ச்சிகள் மூலமாக வெளிப்படுத்தினோம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.