பிரபல பாலிவுட் டைரக்டரும் நடிகரான அனுராக் கஷ்யப் இப்போது கென்னடி எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார். அது இப்போது Cannes திரைப்பட விழாவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஒரு பேட்டியில் அனுராக் “தான் இந்த கதையை விக்ரமுக்காக தான் எழுதினேன். எனினும் அவர் எனது அழைப்பை கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாக வேறொரு நடிகரை நடிக்க வைத்தேன் என கூறி இருந்தார். இதையடுத்து அனுராக் பேசியது வைரலான நிலையில், தற்போது விக்ரம் விளக்கம் கொடுத்திருக்கிறார். விக்ரம் கூறியிருப்பதாவது “ஒரு வருடத்திற்கு முன்பே ஒரு நண்பரிடம் இதுபற்றி அறிந்து நான் உங்களுக்கு கால் செய்து பேசினேன்.

எனக்கு எந்த மெசேஜ் (அ) மெயில் வரவில்லை. நம்பரை 2 ஆண்டுக்கு முன்பே மாற்றி விட்டேன் என்ற உண்மையை கூறினேன். இப்படத்திற்கு என்னுடைய பெயர் வைக்கப்பட்டிருப்பதால் நானும் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என்று விக்ரம் ட்விட்டரில் கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த அனுராக் “ஆம் அதுதான் நடந்தது. யாரும் ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள். நானும் விக்ரமும் இணைந்து பணியாற்றாமல் திரையுலகில் இருந்து ஓய்வுபெற மாட்டோம்.