அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவிடம் உலகின் மிகச்சிறந்த மற்றும் தரம் வாய்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதனை ஏற்றிச் செல்வதற்காக உலகின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் பெருமளவில் அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறிப்பாக, இந்த கப்பல்கள் அனைத்தும் காலியாக அமெரிக்காவை நோக்கிப் படையெடுப்பதே அமெரிக்க எரிசக்தித் துறையின் வலிமையைக் காட்டுகிறது என்று அவர் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். உலகின் அடுத்த இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளைக் காட்டிலும், அமெரிக்காவிடம் மிக அதிக அளவிலும், உயர்தரத்திலும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள சூழலில், டிரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்காவின் பொருளாதார மற்றும் எரிசக்தி ஆதிக்கத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த “இனிமையான” தரமான எண்ணெய்க்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதையே இந்த கப்பல்களின் வருகை உறுதிப்படுத்துவதாக அவர் அந்த கட்டுரையில் விவரித்துள்ளார்.
