பலர் தங்களுடைய ஹெல்மெட் மற்றும் ஷூக்களை பல இடங்களில் அலட்சியமாக வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். அவற்றை மீண்டும் அணிவதற்கு முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருவரின் ஹெல்மெட்டில் சிறிய நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட அந்நபர், பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு வந்த அவர்கள் பாம்பை துரிதமாக பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இனி நீங்களும் உங்களது ஹெல்மெட்டை பயன்படுத்தும் முன் ஒருமுறை அதனை சோதனை செய்துகொள்ளுங்கள்.