தென்றல் உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நிலானி. இவர் கார் லோன் என்கிற பெயரில் தன்னிடம் வினோத முறையில் பண மோசடி செய்யப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது இவர் கார் லோன் எடுக்காமலேயே EMI கட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். குறைந்த வட்டிக்கு கார் லோன் தருவதாகவும், அதற்கான வட்டி விவரங்களை ஆன்லைனில் லாக் இன் பண்ணி தெரிந்து கொள்ளலாம் என மோசடி கும்பல் கூறியுள்ளது.

இதை நம்பி நிலானி, லாக் இன் செய்ய, அதில் வட்டி அதிகமாக காட்டியுள்ளது. எனவே கார் லோன் வேண்டாம் என நிலானி நிராகரித்துள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கு பின்னர் நிலானிக்கு 8.80 லட்சம் கிரெடிட் ஆகி விட்டது. அதற்கான வட்டி தொகையை கட்டுங்கள் என்று மெசேஜ் வந்துள்ளது. மேலும் அவர்கள் மிரட்டியதால் EMI கட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்  புகார் கொடுத்துள்ளார்.