பூங்காவில் அமர்ந்திருந்த ஒருவரின் சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரின் சட்டைக்குள் பாம்பு ஒன்று படுத்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்தவர்கள் பாம்பை வெளியே எடுக்க முயன்றனர். வேகமாக எடுத்தால் பாம்பு கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மெல்ல மெல்ல ஒவ்வொரு பட்டனாக கழற்றினர்.

பின்னர் அந்த பாம்பு மெல்ல கீழே வந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை. பார்த்தாலே மனதில் பதைபதைப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.