கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வட உள் மாவட்டங்களான சேலம், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மே பத்தாம் தேதி வரை வெப்பநிலை  நான்கு முதல் ஏழு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.