அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலை கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடிவமைத்தது. இன்று நடந்த கும்பாபிஷேக விழாவில் சிற்பி அருண் யோகிராஜும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் “நான் இப்போது உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

முன்னோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும். அதே போன்று ஸ்ரீராமர் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறார். சில நேரங்களில் கனவுலகத்தில் நான் இருப்பது போன்றே உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.