காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இந்த யாத்திரையானது அசாம் மாநிலத்தில் நடந்து வரும் நிலையில் மாநிலத்தில் உள்ள மோரிகான் மாவட்ட ஆட்சியர் பாதயாத்திரையை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எழுதிய கடிதத்தில் உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் இந்த நேரத்தில் பாத யாத்திரியை ராகுல் காந்தி நடத்தினால் இதன் மூலம் சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

இது மாவட்டத்தின் அமைதியை கெடுக்கும். ஆகவே மாவட்ட சட்ட ஒழுங்கு சீர்குலைவதை தடுக்கும் வகையிலும் ராகுல் காந்தி அவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் ஸ்ரீமந்த சங்கர்தேவா சவுக்கில் நடக்க இருக்கும் பாதயாத்திரையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.