போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நுழைவு தேர்வில் வெற்றி பெற்றே ஆகா வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் கவனம் செலுத்தமுடியாமலும் போட்டி தேர்வுகளிலும் கவனம் செலுத்த முடியாமலும் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம், இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேல் நிலை தேர்வை முடித்த பின்னரே கோச்சிங் சென்டரில் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது.