இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று காலையுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் போர் துவங்கியுள்ளது. இஸ்ரேல் காசா மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் மேற்கொண்ட ஹமாஸ் ஆயுத குழுவின் தலைவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று உளவு அமைப்பான மொசாட்டிற்கு உத்தரவிட்டுள்ளார்.