உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியின் ஜாம்பவான் மரியோ ஜகாலோ (92) காலமானார். அவரது மரணம் குறித்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள் ஜகாலோவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் சனிக்கிழமை அறிவித்தனர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1958-இல் பிரேசிலின் முதல் உலகக் கோப்பையை வென்றார். 1970-இல் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். இவரது மறைவுக்கு ஃபிபா தலைவர் மற்றும் கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.