உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்று அறிக்கையில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வர வேண்டும். பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி கிடையாது. ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.