ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்காம் தேதி மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில் இதய செயலிழப்பால் உயிருக்கு போராடிய ரஹ்மானை காப்பாற்றியுள்ளது. இதற்கு தமிழக அரசின் விடியல் செயலி தான் பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகள் பற்றிய விவரங்களை கையாள ஏதுவாக உருவாக்கப்பட்டது தான் இந்த விடியல் செயலி. இதனை தொடர்ந்து பலரின் உயிரை தக்க சமயத்தில் இந்த செயலி காப்பாற்றி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.