தற்கொலை தடுப்பு நாளான இன்று மநீம தலைவர் கமல்ஹாசன் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்கொலை தடுப்பு நாளான இன்று (செப்டம்பர் 10ஆம் தேதி) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன். தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள்.

‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள். ‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.