இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு புதியதில் தற்காலிக அலுவலர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் விண்ணப்பத்தை சுகாதாரத் துறையை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை இணைப்பு வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குனருக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.