ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசுவோகா என்ற சுற்றுலா பகுதியில் பயங்கர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜப்பான் நாட்டின் தனி சிறப்புகளில் ஒன்று இயற்கையாக உருவாகும் வெந்நீர் ஊற்றுகள். இந்த வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை கடந்த 30 வருடங்களாக ஒரு கும்பல் வீடியோ எடுத்து விற்பனை செய்து வந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான கரின் சைட்டோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 10,000 பெண்கள் குளிக்கும் வீடியோ கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த 30 வருடங்களாக பெண்கள் குளிப்பதை வீடியோவாக எடுத்து அதை விற்பனை செய்து வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.