டியூஷன் முடிந்து மாலை நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை, மர்ம நபர் ஒருவர் நீண்ட தூரமாகப் பின்தொடர்ந்து வந்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெற்றோர்களை அதிர வைத்துள்ளது. ஒவ்வொரு தெருவாக அந்த நபர் சிறுமிகளை நெருங்கி வந்த நிலையில், அங்கிருந்த ஒரு நபர் அந்த ஆபத்தை உணர்ந்து சாமர்த்தியமாகச் செயல்பட்டு சிறுமிகளைப் பாதுகாத்தார். அந்த மர்ம நபரைக் தடுத்து நிறுத்தி சிறுமிகளுக்கு அரணாக நின்ற அந்த மனிதரின் துணிச்சலால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Shocking video: Two young girls heading home from tuition were followed by a suspicious man. A brave gentleman stepped in and stopped what could’ve been a serious incident.
Parents, don’t send kids alone. Stay alert pic.twitter.com/Oy7am3Y6f8
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 11, 2026
இந்தச் சம்பவம், குழந்தைகள் தனியாகச் செல்லும் நேரங்களில் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை நமக்கு உரக்கச் சொல்கிறது. டியூஷன் சென்டரில் இருந்து வீடு வந்து சேரும் வரையிலான அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் ஆபத்துகள் அதிகம் ஒளிந்திருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியாக அனுப்பாமல் இருப்பது அல்லது பாதுகாப்பான துணையுடன் அனுப்புவது அவசியம். “யாராவது பார்த்துக் கொள்வார்கள்” என்று இருக்காமல், அக்கம் பக்கத்தினரும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வேட்டைக்காரர்களிடம் இருந்து நம் குழந்தைகளைக் காக்க முடியும் என இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
