சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கு அவர் பேசுகையில், இப்போது காங்கிரஸ் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள் காங்கிரஸின் கண்கள் உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சொத்துக்களையும் எக்ஸ்ரே எடுக்கப் போவதாக ராகுல் காந்தி கூறுகிறார், அப்படியெனில் நமது பழங்குடியினரின் ஆபரணங்களையும் தாலியையும் காங்கிரஸ் பறித்துக்கொள்ளும் என்று கூறினார்.