திமுக எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் பல விஷயங்கள் குறித்தும் பேசினார். அப்போது, ”மிக்ஜாம் புயலின்போது உதயநிதி, எங்கள் வரியிலிருந்து நிவாரணம் தர கேட்டபோது, ‘நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை’ என்று கூறியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உங்க அப்பன் வீட்டு காசு, உங்க ஆத்தா வீட்டுக்கு காசு, என பேசக்கூடாது என கூறினார்.

நாங்கள் இப்பொழுது அவரைப் பார்த்து, உங்கள் தோப்பனார் வீட்டுக் காசையா கேட்கிறோம்? என்று கேட்டால் நன்றாக இருக்குமா? உங்கள் பேச்சில் வன்மம் இருக்கிறது. அதை நாங்கள் கண்டிக்கின்றோம்” என்று சாடினார்.