சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்தந்த காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் போலீசின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.