காலையில் எழுந்ததும் டூத் பிரஸ் மூலமாக பல் துலக்குவோம். ஆனால் அதனை சுகாதாரமற்ற இடங்களிலும் குளியலறைகளிலும் வைத்தால் நோய்கள் தாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது டூத் பிரஷை கழிப்பறையில் வைப்பதால் கிருமிகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனென்றால் குளியலறையில் ஈரப்பதமான சூழல் கிருமிகளுக்கு சாதகமானது. இவை அனைத்தும் தொற்று நோய்களை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கண்ணுக்குத் தெரியாமல் வெளியேற்றும் கழிவுகளும் இதில் குவிய அதிக வாய்ப்பு உள்ளது.