தமிழக அரசின் திட்டங்களை கண்காணிக்கவும், மக்களின் குறைகளை களையவும் உங்களை தேடி, உங்கள் ஊரில்  என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை இம்முகாமை நடத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆண்டின் தொடக்கத்திலேயே ஓராண்டிற்கான அட்டவணையை ஆட்சியர் தயார் செய்யவும், நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது