இந்தியாவின் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள மக்களுக்கு அரசின் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அதன்படி மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச மருத்துவ சேவை கிடைக்க உள்ளது.

இந்த வசதி அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச சிகிச்சைக்காக ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படும். இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் நடைபெற்ற வரும் நிலையில் இந்த சலுகை மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் பல நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் எனவும் இந்த சலுகையை பெற ரேஷன் கார்டை காண்பித்து பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.