நேபாள நாட்டை சேர்ந்த வீரர் உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டு வந்த நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார். இது குறித்து நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவுக்காக போரில் போரிட்டு வந்த குந்தன் சிங் நாகி என்பவர் உயிரிழந்தார்.

இதனால் உயிரிழந்த நேபாள நாட்டினரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. உக்ரைன் படையிலும் நேபாள நாட்டினர் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.