ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த 83 வேட்பாளர்களில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில் 77 பேர் போட்டியிட உள்ளனர். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்ததையடுத்து, இடைத்தேர்தல் களத்தில் 77 பேர் போட்டி என்பது உறுதியாகி உள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் நேரம் மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என 4 முனைப்போட்டி போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.. பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற்று, மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.