ஈரோடு இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு சேகரிப்பு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களை கூறி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பி.விஜயகுமாரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.