ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். அதிமுக சார்பாக தென்னரசு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் என மொத்தம் 77 பேர் தேர்தலில் களம் இறங்குகின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் பான்மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட 12 அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக ஏற்க மறுப்பதாக வாக்காளர் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.